கோவையில் பெய்த மழை- ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் சிரமம்...

published 4 months ago

கோவையில் பெய்த மழை- ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் சிரமம்...

கோவை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி  ஓரிரு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் சாரல் மழை ஓரிரு பகுதிகளில் பெய்கிறது. இந்நிலையில் இன்று கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில்  மழை பெய்தது குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. ஒருபுறம் இது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe