தசரா பண்டிகை- கோவையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்...

published 4 months ago

தசரா பண்டிகை- கோவையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்...

கோவை: வடமாநிலங்களில் தசரா பண்டிகை முன்னிட்டு வட மாநிலத்தவர்கள் அதிகளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலமாக செல்கின்றனர்

 பீகார்,உத்தரகாண்ட்,பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் தசரா தசரா பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தசரா பண்டிகையொட்டி கோவை ரயில் நிலையத்தில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் மூட்டை முடிச்சி உடன் சொந்த ஊருக்கு செல்வதால் இன்று இரவு எட்டு மணி அளவில் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு காணப்படுகிறது.

மேலும் ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.அதனைத் தொடர்ந்து ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வட மாநிலத் தொழிலாளிகள் ரயில் நிலையம் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பீகார்,உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயிலுக்காக காத்திருக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe