கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி...

published 4 months ago

கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி...

கோவை:தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு பேரணி நடைபெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று கோவை சிவானந்தா காலனியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

ஆர்.எஸ்.எஸ் தினமான விஜயதசமி அன்று நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் 
மற்றும் பொது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் பேரணியானது கோவை சிவானந்தா காலையிலிருந்து தொடங்கி புது பாலம்,தயிர் ஈட்டேரி சாலை, கண்ணப்பன் நகர்,நல்லாம் பாளையத்தில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் நிறைவடைந்தது. மேலும் கோவையில் வடவள்ளி மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரண்டு இடங்களில் இந்த பேரணி நடைபெற்றது.

பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களை எழுப்பியவாறு 500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ்  தொண்டர்கள் பேரணியில் ஈடுபட்டுபட்டனர்.இந்த பேரணியை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பேரணி நிறைவடைந்த பிறகு பொது நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe