கோவை வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா..! மாயமான கடத்தல் மன்னர்களுக்கு வலை

published 2 years ago

கோவை வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா..! மாயமான கடத்தல் மன்னர்களுக்கு வலை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தன்பாத்தில் இருந்து கோவை வழியாக ஆலப்புழா செல்லும் ரயிலிலிருந்து கோவை போலீசார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை வழியாக கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், கோவை வந்த அனைத்து ரயில்களில்களிலும் இன்று ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோவை ரயில் நிலையம் வந்த  தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில்,  ஆய்வு மேற்கொண்ட போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் உள்ள கழிவறை அருகே சில மூட்டைகள் கிடந்துள்ளது. அதை எடுத்து சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக ரயில்வே போலீசார் திடீரென சோதனை மேற்கொள்ளும்போது கஞ்சாவை எடுத்து வரும் நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் ரயில் நிலையத்திலோ, அல்லது வேறு பெட்டிகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். 

இந்த சூழலில் ரயில் வழியாக தமிழகத்திற்கு அதிக அளவு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வருவதால் தமிழக ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe