மாநில அளவிலான கராத்தே போட்டி : அசத்திய 900 வீரர் வீராங்கனைகள்

published 2 years ago

மாநில அளவிலான கராத்தே போட்டி : அசத்திய 900 வீரர் வீராங்கனைகள்

கோவை: கோவையில் நடைபெற்ற தமிழக அளவிலான கராத்த்தே போட்டியில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர். மாநில அளவிலான  தமிழ்நாடு ஓப்பன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, ஈரோடி,திருப்பூர், நீலகிரி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக  நடைபெற்ற இந்த போட்டியை  பி.எஸ்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன்  துவக்கி வைத்தார். இதில், ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 5 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீரர்  கலந்து கொண்டு அசத்தினர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிரகாசன், பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ்,மற்றும் துறை தலைவர்கள் செந்தில் குமார்,அரசு,கிருஷ்ணம்மாள் கல்வி குழுமங்கள் நிர்வாக அறங்காவலர் கோபி குமார் மற்றும்  கராத்தே சங்க நிர்வாகிகள் நீல் மோசஸ்,வெங்கட்,பால் விக்ரமன்,வீரமணி,சினுத்,பாலசுப்ரமணியம்,ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe