கோவையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- கோரிக்கைகள் என்ன..?

published 3 hours ago

கோவையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- கோரிக்கைகள் என்ன..?

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ - ஜியோ) தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தி.மு.க ஆட்சியரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர் -  ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டு உள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க வினர் தேர்தலுக் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறி 400 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தி.மு.க அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற விட்டால் அடுத்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக தான் இருக்கும் என்று பெண் ஆசிரியர் ஒருவர் ஆக்ரோஷமாக எச்சரிக்கை விடுத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe