வீடு புகுந்து நகை, பணம் திருட்டு- கோயிலுக்கு சென்றபோது துணிகரம்…

published 1 week ago

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு- கோயிலுக்கு சென்றபோது துணிகரம்…

கோவை: கோவையில் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடி தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன்(28). 

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அண்டை வீட்டார் இது குறித்து செல்போனில் பாலமுருகனுக்கு தகவல் கொடுத்தனர். 

அதிர்ச்சியடைந்த பாலமுருகன் கோவை திரும்பி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இது குறித்து அவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe