இது தான் எங்க ஊரு: இப்தாரில் கலந்து கொண்ட பேரூர் அடிகளார்!

published 1 week ago

இது தான் எங்க ஊரு: இப்தாரில் கலந்து கொண்ட பேரூர் அடிகளார்!

கோவை: கோவையில் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் கலந்து கொண்டது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே கோவையில் அத்தர் ஜமாத் பள்ளிவாசலில் சமுதாய மனிதநேய, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ரமலான் நோன்பு, இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு ரூபாய் ஒரு உயிர் மருத்துவ சேவை அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறையின் உயர் மட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பேரூர் ஆதீனமுமான மருதாசல அடிகளார் கலந்து கொண்டார்.

அவருடன், பேரூர் சாந்தலிங்க அடிகளார் நிர்வாகத்தைச் சேர்ந்த உமாபதி சிவம் தம்புரான் அடிகளார், மரகதம், பாஸ்கரன் அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கோனியம்மன் தேர்த் திருவிழாவின் போது, நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள் குடிநீர் உணவு வழங்கி நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்தார் நிகழ்வில் பேரூர் அடிகளார் கலந்து கொண்டது கோவை மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe