கோவையில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை; ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு !!!

published 2 days ago

கோவையில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை; ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு !!!

கோவை: கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் அமைப்பு சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. 

இதில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக இன்று ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவையில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் அமைப்பினர் கொண்டாடினர்.

ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். 

ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe