சூலூர் பகுதியில் காரில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது

published 2 years ago

சூலூர் பகுதியில் காரில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: சூலூரில் காரில் வைத்து 22 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சூலூரை அடுத்த தோப்பூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்வின் (24) என்பதும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (19) என்பதும் தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe