கோவை அரசு அலுவலங்களில் அண்ணா புகைப்படம் வைக்க கோரிக்கை

published 2 years ago

கோவை அரசு அலுவலங்களில் அண்ணா புகைப்படம் வைக்க கோரிக்கை

கோவை: அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை- கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வழங்கிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.

வருகின்ற 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  வே.ஈசுவரன் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வழங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவரே பேரறிஞர் அண்ணா தான் என தெரிவித்த அவர் தமிழக முதல்வரும் தங்களது இந்தக் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe