அம்பேத்கர் சிலைக்கு மாலை.. வெற்றிவேல் வீரவேல் முழக்கம் காயத்திரி ரகுராம் செயலால் பரபரப்பு..!

published 2 years ago

அம்பேத்கர் சிலைக்கு மாலை.. வெற்றிவேல் வீரவேல் முழக்கம் காயத்திரி ரகுராம் செயலால் பரபரப்பு..!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிம் பா.ஜ.க.,வை சேர்ந்த காயத்ரி ரகுராம் அம்பேத்கர் சிலை முன்பு "வெற்றிவேல்... வீர வேல்" என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை "சமத்துவ நாள்" என திமுக அரசு கொண்டாடி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் சிலை, புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமின்றி சமத்துவ உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்று கொண்டனர். இதேபோல் காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. பாஜகவின் தலைப்பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தலைமையில் பாஜகவினர் வந்தனர். அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, "வெல்க வெல்க வெல்கவே... பாஜக வெல்கவே... பாரத் மாதாகி... ஜே.. வெற்றிவேல் வீரவேல்... வீரவேல்... வெற்றி வேல்... வெற்றி... வெற்றி... வெற்றிவேல்.... வீர... வீர... வீர வேல் என அவர்கள் கோஷமிட்டனர்'' இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe