கோவையில் மக்கள் குறைகளைக் கேட்ட கமல்ஹாசன்

published 2 years ago

கோவையில் மக்கள் குறைகளைக் கேட்ட கமல்ஹாசன்

 

கோவை: கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வானதி சீனிவாசனிடம் 1728 வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அதில் தேர்தல் முடிவுகளில் முன்னிலையிலிருந்த கமல்ஹாசன் கடைசி இரண்டு சுற்றுகளில் கெம்பட்டி காலனி வாக்குகளில் கமல் சரிவைக் கண்டார். வெற்றி வாய்ப்பு வானதிக்குச் சென்றது. 

இந்நிலையில் கெம்பட்டி காலனியில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டார். பின்னர் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:

800 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் கழிவறை இல்லை, 1 கழிவறை தான் இருக்கிறது, கழிவறை நாங்கள் கட்டி தருகிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்குச் செய்கிறோம். 

கிராம சபை தூசி தட்டி மீண்டும் நடக்க நாங்களும் காரணம். அம்மன்குளம் பகுதியிலும் ஆய்வு செய்து மக்களின் தேவையைச் செய்வோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு,  சமூகத்திற்கான உறவு. நாங்கள் கட்டித்தரும் கழிப்பறை நம்முடைய கழிப்பறை. அதை ஆரோக்கியமான இடமாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். 

அதை நான் பார்க்க மீண்டும் வருவேன். அது க்ளீனாக இல்லை என்றால் வெளக்கமாரை எடுத்து நானே க்ளீன் செய்வேன். நான்கு கழிப்பறைகள் கட்டி தருகிறோம் என்று கூறி மக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe