பெற்றோரிடம் சொல்லாமல் புத்தகம் வாங்கச்சென்ற சிறுமிகள்: பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

published 2 years ago

பெற்றோரிடம் சொல்லாமல் புத்தகம் வாங்கச்சென்ற சிறுமிகள்: பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

 

கோவை: கோவையில் பெற்றோரிடம் சொல்லாமல் புத்தகம் வாங்கச்சென்ற சிறுமிகளை மீட்ட காவல்துறையினர் அவர்களுக்குப் புத்தகம் வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த  பத்து வயது சிறுமிகள் இரண்டு பேர்  'ஸ்போக்கன் இங்கிலீஷ்' புத்தகம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். முடிவெடுத்த அவர்கள் இருவரும் பெற்றோரிடம் கூறாமல் பேருந்தில் ஏறி உக்கடம் சென்றுள்ளனர்.

இதனிடையே சிறுமிகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளைத் தேடி வந்தனர்.

விசாரணையின் போது கோவை உக்கடம் பகுதியில் சிறுமிகள் இருவரும் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து உக்கடம் காவல்துறை அதிகாரிகள் சிறுமிகள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.  

அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து சிறுமிகள் வாங்க நினைத்த 'ஸ்போக்கன்  இங்கிலீஷ்' புத்தகத்தை வாங்கி கொடுத்து அறிவுரைகள் வழங்கி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe