கோவையில் போக்சோ வழக்கு: குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

published 2 years ago

கோவையில் போக்சோ வழக்கு: குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

 

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்போரைச் சேர்ந்த தங்கம் என்பவரது மகன் செந்தில்வேல் (26) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி மேற்கண்ட நபரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் பரிந்துரைத்ததின் பெயரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அந்நபரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செந்தில்வேல் (26) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe