ஆனைமலையில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை

published 2 years ago

ஆனைமலையில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை

கோவை: ஆனைமலை திவான்சாபுதூர் புது காலனியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 47), கூலித் தொழிலாளி. இவரது  மனைவி பாக்கியம் (45).
இந்த நிலையில் நாச்சிமுத்து கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். 
சம்பவத்தன்று  வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் திடீரென வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் வலியால் அவர் அலரி துடித்தார். 
அவரின் சத்தத்தைக் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு நாச்சிமுத்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe