லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

published 2 years ago

லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

ஆனைமலை தாதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்தது.

கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி மாலதி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார் .

இதனால் மனவேதனை அடைந்த ஜெகநாதன் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe