கோவையில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

published 2 years ago

கோவையில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை: 

கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் மீது நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். 

அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. 

அவர்களின் வாகனங்களும் சேதம் அடைந்தன. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் பதட்டம் நிலவியது.

 இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மேலும் ஒரு பாரதிய ஜனதா நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe