சூலூரில் சாலையோரம் கிடந்த பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்த பெண் பலி

published 2 years ago

சூலூரில் சாலையோரம் கிடந்த பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்த பெண் பலி

 

கோவை: கோவை கிணத்துகடவைச் சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரோம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனைப் பார்த்த அவர் அதனை எடுத்துக் குடித்தார்.

பின்னர் தனது வேலையை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்குத் தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

அவர் மஞ்சுளாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe