கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி

published 2 years ago

கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் அறிவியல் ஆகிய பாடங்களை நடத்தும் பேராசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகத்தின் 30 மையங்களில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 9 பல்கலைக்கழகங்களும் பயிற்சி மையங்களாக செயல்படும்.

இந்த பயிற்சி முகாமில் உயர்கல்வி தரமேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல், கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீகாரம் பெறுவது, மென்பொருள் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில்துறையில் எதிர்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள் மற்றும் அதற்கேற்ற திறன்கள் குறித்து பல்வேறு நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் 2 நாள் நடை பெறும் பயிற்சி முகாமில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் அறிவியல் ஆகிய பாடங்களை நடத்தும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடு  கல்லூரி முதல்வர் கலைச்செல்வி செய்து வருகிறார். இதில் சிறப்பு விருந்தினராக பொன்னுசாமி, ஜெயசுதா, எஸ். பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe