2 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு

published 2 years ago

2 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு

 

கோவை: கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலாத் தளங்களில் கோவைக் குற்றால அருவியும் ஒன்றாகும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

அருவியில்  குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்துச் சுற்றலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றலாப் பயணிகள் வனத்துறையின்த் தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கானக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவைக் குற்றாலத்தில் அவ்வப்போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை வனத்துறையினர் கண்காணித்து நீரின் வரத்து அதிகரித்தால் சுற்றலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்படும்.

கடந்த சில மாதங்களாகக் கோவை குற்றாலத்தில் அவ்வப்போது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது எல்லாம் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு கடந்த ஜூலை மாதம் தென் மேற்குப் பருவமழைத் தீவிரம் அடைந்தது. இதனால் கோவைக் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதமாக அருவிக்குச் செல்ல அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை எனத் தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனையடுத்து இன்று (27-ஆம் தேதி) முதல் கோவைக் குற்றாலம் திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe