கோவையில் தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு

published 2 years ago

கோவையில் தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு

 

கோவை: நடிகர் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கலைப்புலி' எஸ். தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்' திரைப்படம் இன்று வெளியானது.

இந்நிலையில்  படம் வெளியான கோவையிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் ரசிகர்கள் காலை முதல் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தனுஷ் தலைமை நற்பணி மன்றத்தின் சார்பாக காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள கங்கா திரையரங்கில் காலை முதல் ரசிகர்கள் உற்சாகமாக, அமைதியான முறையில் திரையரங்கிற்கு வந்தனர்.

இதில் கோவை மாவட்ட கௌரவத் தலைவர் மணி, தலைவர் சங்கர், செயலாளர் அருள் முருகன் ,பொருளாளர் அந்தோணி மற்றும் நிர்வாகிகள் பழனி வினோத் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் படை சூழ தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படத்தை உற்சாகமாக  ஆடல் பாடலுடன் வரவேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe