கூடலூரிலிருந்து புறப்பட்டு இன்று கர்நாடகாவில் பாத யாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி

published 2 years ago

கூடலூரிலிருந்து புறப்பட்டு இன்று கர்நாடகாவில் பாத யாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி

 

ஊட்டி: அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்த் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்திக் கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர், கேரள மாநிலத்திற்குச் சென்று அங்கு கடந்த 11-ஆம் தேதி தனது பாதயாத்திரையைத் தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்துப் பேசி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். நேற்று மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் வழியாகத் தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார். அங்கு அவரைத் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அவர் அங்குள்ள அரசுக் கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து அரசுக் கலைக்கல்லூரியிலிருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்கினார். அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்கக் காங்கிரஸ் கட்சியினர் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

நந்தட்டி, பள்ளிப்பாடி, செம்பாலா வழியாகக் கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை இசைத்தபடியும், நடனமாடியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார்ப் பள்ளி மைதானத்தில் வேனிலேயே தங்கி ஓய்வெடுத்தார். கூடலூரில் பாதயாத்திரையை முடித்துக் கொண்ட ராகுல்காந்தி இன்று காலை கூடலூரிலிருந்து வேனில் கர்நாடகாவுக்குச் சென்றார். கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையைத் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாகச் சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe