குவாரிக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்களின் கைப்பேசிகள் திருட்டு: 3 வாலிபர்கள் கைது

published 2 years ago

குவாரிக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்களின் கைப்பேசிகள் திருட்டு: 3 வாலிபர்கள் கைது

கோவை: கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.

இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்துக் குவாரியில் உள்ள தங்களது அறைக்குத் தூங்கச் சென்றனர்.

மறுநாள் அதிகாலை வடமாநில தொழிலாளர்கள்  வேலைக்குச் செல்வதற்காக எழுந்தனர். அப்போது அறையிலிருந்த அவர்களது 3 கைப்பேசிகள் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேடிப் பார்த்துக் கிடைக்காததால் அவர்கள் செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.

அவர் குவாரியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் குவாரியிலிருந்து வெளியே செல்வது  பதிவாகியிருந்தது. உடனே  செந்தில்குமார் அவர்களை அழைத்துக் கொண்டு விரைந்து சென்று அந்த 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார்.

பின்னர் அந்த வாலிபர்களை  செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் அவர்கள் விருதுநகரைச் சேர்ந்த மாரிஸ்வரன் (19), ஈச்சனாரியைச் சேர்ந்த குனசேகரன் (19), செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (19) என்பதும், நண்பர்களான அவர்கள் செட்டிப்பாளையத்தில் தங்கிக் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe