பொள்ளாச்சியில் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய ஓட்டுநர்

published 2 years ago

பொள்ளாச்சியில் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய ஓட்டுநர்

 

கோவை: பொள்ளாச்சி பி. நாகூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29), ஓட்டுநர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்புக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பார்த்தசாரதிக்குக் குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சங்கீதா அவரை கண்டித்தார்.  இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சங்கீதா கோபித்துக் கொண்டு எம். ஜி. புதூரிலுள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.

சம்பவத்தன்று பார்த்தசாரதி, சங்கீதாவைப் பார்ப்பதற்கு அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பார்த்தசாரதி சங்கீதாவை மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார்.  

பின்னர் அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டுப் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதுகுறித்து சங்கீதா  வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe