பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம்: மகளின் திருமண புகைப்படத்தைப் பார்த்த தந்தை அதிர்ச்சி

published 2 years ago

பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம்: மகளின் திருமண புகைப்படத்தைப் பார்த்த தந்தை அதிர்ச்சி

 

கோவை: சிவகங்கை மாவட்டம் காளையாறுகோவிலைச் சேர்ந்த 21 வயது இளம் பெண், இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நர்ஸாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை, எனவே ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் விடுமுறையில் சென்றார். ஆனால், அவர் வீட்டிற்குச் செல்லவில்லை. இந்த நிலையில், இளம் பெண்ணின் தந்தை தனது மகளின் வாட்ஸ்-அப் ஸ்டேடஸை பார்த்தார்.

அப்போது தனது மகள் திருமணக் கோலத்தில் ஒரு வாலிபருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தனது மகள் வேலைபார்க்கும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு தனது மகள் குறித்துக் கேட்டார்.

அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர், உங்கள் மகள் விடுமுறையில் சென்று 3 மாதங்கள் ஆகிவிட்டது எனக் கூறிவிட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் தந்தை அவரது கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டார். அப்போது அவரது கைப்பேசி சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் தனது மகளின் தோழிகளிடம் விசாரித்தார். அப்போது அந்த இளம் பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததும், வீட்டிற்குத் தெரிந்தால் எதிர்ப்பு வரும் என்பதால் தனது காதலனுடன் சென்று திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து இளம் பெண்ணின் தந்தை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து அதனை கைப்பேசியில் பதிவேற்றம் செய்த நர்ஸை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe