கோவையில் திருட்டில் ஈடுபட்ட வெளியூர் வாலிபர்கள்

published 2 years ago

கோவையில் திருட்டில் ஈடுபட்ட வெளியூர் வாலிபர்கள்

கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசி படின்கரையை சேர்ந்தவர் விஜயகுமார்  (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணியாற்றுகிறார். இவர் சம்பவத்தன்று கட்டம்பட்டியில் உள்ள கம்பெனியில் ஆய்வு செய்ய வந்தார்.
ஆய்வு செய்யும் பொழுது வாலிபர் ஒருவர் கம்பெனியில் இருந்த 3 கிலோ காப்பர் வயர்களை  எடுத்து உருக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த பொழுது அங்கிருந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் விஜயகுமார் ஊழியர்களின் உதவியுடன் அந்த வாலிபரை நெகமம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார்  விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த ஜீவானந்தம் (32) என்பதும், வேலை இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விவசாயி
கோவை பேரூரை அடுத்த சென்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (37). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மோட்டார் பம்பு திருட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகிலிருந்தவர்கள் அதிகாலை தோட்டத்திலிருந்து 2 பேர் சாக்கு மூட்டைகளைத் தூக்கிச் சென்றதாகத் தெரிவித்தனர். பின்னர்  இதுகுறித்து கதிர்வேல் பேரூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (31) என்பவர் வடமாநில வாலிபர் ஒருவருடன் சேர்ந்து கதிர்வேல் தோட்டத்தில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பார்த்திபனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வடமாநில வாலிபர் யார் என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe