மோட்டார் சைக்கிளை முந்தி சென்றதால் தொழிலாளியைத் தாக்கிய 2 வாலிபர்கள்

published 2 years ago

மோட்டார் சைக்கிளை முந்தி சென்றதால் தொழிலாளியைத் தாக்கிய 2 வாலிபர்கள்

 

கோவை: நெல்லையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டி இருந்து கே.ராக்கிபாளையம் ரோட்டில் சென்றார்.

அப்போது  அவருக்கு முன்னால் 2 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை விஜயகுமார் முந்தி சென்றார். இதனைப் பார்த்த அந்த வாலிபர்கள் விஜயகுமார் முந்தி செல்ல முயற்சி செய்தனர். அதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர்  விஜயகுமாரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். கீழே விழுந்த மற்றொரு வாலிபரும் அங்கு சென்றார்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரைத் தாக்கி மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தனர். இதுகுறித்து விஜயகுமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை விஜயகுமாரைத் தாக்கிய கே.ராக்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த  மோகன்குமார் (35) மற்றும் கனகராஜ் (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe