கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் ரெயில் மோதி அடையாளம் தெரியாத 2 பேர் பலி

published 2 years ago

கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் ரெயில் மோதி அடையாளம் தெரியாத 2 பேர் பலி

 

கோவை: கோவை சிங்காநல்லூர் ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ரெயில்வே காவல்துறை துணை-ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலானக் காவல்துறைடயினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த ஆணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று  வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து ரெயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

துணை-ஆய்வாளர் ராமன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்துத் தெரியவில்லை. அவர்கள் ரெயில் தண்டவாளத்தைக் கடந்தபோது ரெயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe