வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பசுமைத் தீர்ப்பாயக் கண்காணிப்புக் குழு ஆய்வு

published 2 years ago

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பசுமைத் தீர்ப்பாயக் கண்காணிப்புக் குழு ஆய்வு

 

கோவை: கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 6500-க்கும் மேற்பட்டத் தெருக்கள் உள்ளன. இங்கிருந்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்குத் தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.

இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்காமல் குப்பைகளை மக்கள் அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து  ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்குக் கொண்டு வரும் குப்பைகளைக் குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்டக் கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம், பாரதி பூங்கா, பனைமரத்தூர், ஆர். எஸ். புரம் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் இயங்கி வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மைக்கான தேசியப் பசுமைத் தீர்ப்பாய மாநிலக் கண்காணிப்புக் குழுத் தலைவர் நீதிபதி ஜோதிமணி இன்று வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நுண்ணுயிர் மையங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தொடர்ந்து ஆர். எஸ். புரம் கலையரங்கில் நண்பகல் 12 மணிக்கு மேயர், துணை- மேயர், கவுன்சிலர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கயுள்ளார்.

இதற்கிடையே வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பையோ-மைனிங் மூலம் குப்பைகள் அகற்றப்படுவது, குப்பைக்கிடங்கிற்கு வரும் குப்பைத் தரம் பிரிக்கப்படுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe