துடியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி பலி

published 2 years ago

துடியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி பலி

கோவை: கோவை துடியலூரை அடுத்த கே.என்.ஜி.புதூரை சேர்ந்தவர் கணபதி ராஜன் (வயது 63). காவலாளி.

சம்பவத்தன்று இவர் மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் லட்சுமி நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற கணபதி ராஜன் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாகச் சென்றவர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற மர்ம நபர் யார்? விபத்தை ஏற்படுத்தியது எந்த வாகனம்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe