சூலூரில் கணக்காளர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை

published 2 years ago

சூலூரில் கணக்காளர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை

கோவை: கோவை  சூலூரை அடுத்த மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு  குடும்பத்துடன் தேனிக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த நகைகளை  கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீடு திரும்பிய ரமேஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகை, தங்க காசு, வைர நகை ஆகியவரை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில்  பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவத்தை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe