தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டி கோவையில் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் அரசு பணியாளர்கள் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாது அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும், மாநில மொழியில் படித்தவர்களுக்கு அது வாய்ப்பாக அமையும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட செயலாளர் அர்ஜுன் மாவட்ட பொருளாளர் தினேஷ், உட்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe