கோவையில் தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

published 2 years ago

கோவையில் தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

 

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை சேர்ந்தவர் பஞ்சலிங்கம்(52). இவர் கோவை - திருப்பூர் இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார்.

நேற்று பஞ்சலிங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அதன் பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவருக்கும், பஞ்சலிங்கத்துக்கும் இடையே டைமிங் பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தனியார் பஸ் ஊழியர்கள் பஞ்சலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது.

தாக்குதலில் காயமடைந்த பஞ்சலிங்கம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe