கோவை கோட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம் திட்டம்

published 2 years ago

கோவை கோட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம் திட்டம்

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளனதாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 

‘‘ கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என 4 மாவட்டங்களில் 2800க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை வரும் 24ம் கொண்டாடப்பட உள்ளது. 

இதனை அடுத்து கோவை கோட்டத்தில் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி, கரூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து அதிகரிக்கப்படும்,’’ என்றார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe