கோவையில் கத்திமுனையில் மிரட்டி 3 பேரிடம் செல்போன் பறிப்பு

published 2 years ago

கோவையில் கத்திமுனையில் மிரட்டி 3 பேரிடம் செல்போன் பறிப்பு

 

கோவை : கோவை சாயிபாபா காலனியில் கத்திமுனையில் மிரட்டி 3 பேரிடம் செல்போன்கள் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் பொன்னரசன்(31). இவர் கோவை சாயிபாபா காலனி பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று சாயிபாபா காலனி - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஒயின்ஷாப் அருகே தனது நண்பர்கள் கயல்நாத், விஜய் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த 2 வாலிபர்கள், அவர்களிடம் செல்போன்களை தருமாறு மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்ததால், ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் சேர்ந்து கத்திமுனையில் மிரட்டி பொன்னரசன் உட்பட 3 பேரிடம் இருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 3 செல்போன்களை பறித்து தப்பினர்.

இது குறித்து பொன்னரசன் சாயிபாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்திமுனையில் மிரட்டி செல்போன்கள் பறிப்பில் ஈடுபட்டது சாயிபாபா காலனி என்எஸ்ஆர் ரோட்டை சேர்ந்த வன்னியராஜ்(எ) வன்னீஷ்(33), மற்றும் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சபரி(22) என்பது தெரியவந்தது.

பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் வன்னியராஜ் மீது மட்டும் வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், ஏற்கனவே அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe