மனைவியுடன் பேசியதால் ஆத்திரம், காவலாளிக்கு அடி- உதை: அரசு பேருந்து ஓட்டுநர் கைது

published 2 years ago

மனைவியுடன் பேசியதால் ஆத்திரம், காவலாளிக்கு அடி- உதை: அரசு பேருந்து ஓட்டுநர் கைது

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அக்காமலை 3-வது பிரிவைச் சேர்ந்தவர் ஜெயபால் (59). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் காவலாளியாக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (48). அரசு பேருந்து ஓட்டுநர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயபால்,  தர்மராஜின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் வாங்கி குடித்தார்.
அப்போது அங்கு வந்த தர்மராஜ், ஜெயபாலிடம் எதற்காக இங்கே வந்தாய், என் மனைவியிடம் நீ எதற்கு பேசிக் கொண்டு இருக்கிறாய் எனக் கேட்டார்.  இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. 
இதில் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், தனது தந்தை வீரபுத்திரனுடன் சேர்ந்து ஜெயபாலை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரகட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜெயபாலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து ஜெயபால் வால்பாறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேருந்து ஓட்டுநர் தர்மராஜை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரின் தந்தை வீரபுத்திரனை தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe