சிங்காநல்லூர் அருகே ரெயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

published 2 years ago

சிங்காநல்லூர் அருகே ரெயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே காவல் துணை-ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது வலது புறம் மார்பு மற்றம் வலது காலில் ஒரு மச்சம் இருந்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தைக் கடந்தபோது ரெயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பார்க்கலாமே... கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe