தாய்ப்பால் குடித்தால் தான் தாயின் சொல்லைக் கேட்பார்கள்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

published 2 years ago

தாய்ப்பால் குடித்தால் தான் தாயின் சொல்லைக் கேட்பார்கள்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

கோவை: நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது மேடையில் பேசிய அவர்
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர் தமிழ் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் எத்தனை பேர் என மேடையிலிருந்து கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், தாய் மொழியைக் கற்றுக்கொண்ட பின்னர் இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள்,ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசி பழகுவது நல்லது எனக் கூறினார். 
பிறந்த குழந்தை 6 மாதத்திற்கு தன்னுடைய அம்மாவின் தாய்ப்பாலைக் குடிப்பதால் தாயின் சொல்லைக் கேட்பார்கள், இப்போதெல்லாம் தாய்ப்பாலைக் குடிப்பதில்லை, கன்றுக் குட்டியின் பாலைத்தான் குடிக்கிறார்கள், அதனால் தான் இளைஞர்கள் தாயின் சொல்லைக் கேட்காமல் டாஸ்மாக்கில் போய் குடிக்கிறார்கள் எனவும் 10 கோடி பேர் இந்தியாவில் போதைக்கு அடிமையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

"திராவிட மாடல் போல திராவிட மாதிரி என இருந்தால் சரியாக இருக்குமோ? தாய்மொழியில் முழுமையாக இருக்க வேண்டும். திராவிட மாடல் (ஆங்கில சொல்) என்று சொல்வதற்குப் பதில் திராவிட மாதிரி (தமிழ்ச் சொல்) எனச் சொன்னால் சரியாக இருக்குமோ என்பது ஒரு சின்ன யோசனை. மற்ற மொழியை வேண்டாம் எனச் சொல்வதற்கு முன் நம் மொழியை முழுவதுமாக கற்றுக்கொள்வோம். புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.", என அவர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe