ராமநாதபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

published 2 years ago

ராமநாதபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கோவை : கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரமேஷ் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வருகிறார். 

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். 

மறுநாள் கோவிலைத் திறக்க வந்த பூசாரி ரமேஷ் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe