காரமடையைச் சேர்ந்த தந்தை (26), மகன் (5) பரிதாப பலி

published 2 years ago

காரமடையைச் சேர்ந்த தந்தை (26), மகன் (5) பரிதாப பலி

கோவை: கோவையை அடுத்த காரமடை பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26), மில் தொழிலாளி. இவர் அன்னூர் குன்னத்தூரை அடுத்துள்ள ஓரைக்கால்பாளையத்தில் மனைவி சவுந்தரியா (25) மற்றும் மகன் சாய் தக்சன் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவி சௌந்தர்யா மற்றும் மகனுடன் நேற்றிரவு மொப்பட்டில்  கோவில்பாளையத்திலிருந்து ஓரைக்கால்பாளையத்திற்கு சென்றார்.
அப்போது சத்தி ரோட்டில் ஓரைக்கால்பாளையம் பிரிவில் திரும்பும் போது சத்தியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் அசுர வேகத்தில் மொப்பட் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தனர். ரோட்டை ஒட்டிய 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. விபத்து ஏற்பட்ட தகவலறிந்த பொதுமக்கள் விரைந்து வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதில் வந்த மருத்துவர் பிரகாஷ் மற்றும் அவரது மகன் சாய் தக்சன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்துத் தகவலறிந்த அன்னூர் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான தந்தை மற்றும் மகன்  உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சவுந்தரியா அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அதிவேகமாகக் காரை ஓட்டி வந்தது அன்னூரை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த  முத்துசாமி என்பது தெரியவந்தது.
தந்தை, மகன் பரிதாபமாகப் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe