கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

published 2 years ago

கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

கோவை: கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் வல்லரசு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.600-யை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள். அந்த 2 பேரும் தப்பி சென்றனர். இது குறித்து வல்லரசு ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பணத்தை பறித்தது ரத்தினபுரியை சேர்ந்த மாணிக்கம் (24), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட  பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe