கோவையில் குற்றவழக்குகளை சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு பாராட்டு

published 2 years ago

கோவையில் குற்றவழக்குகளை சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு பாராட்டு

கோவை: கோவை மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை, ஆதாய கொலை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற வழக்குகளை சிறப்பாக துப்புதுலக்கி எதிரிகளை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிழ்கள் வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு தனிப்பிரிவு காவல் துறையினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆதாய கொலை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த  ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர், 8 காவல் ஆய்வாளர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 7 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 44 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe