கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 2 ரயில்கள் நேரம் மாற்றம்

published 2 years ago

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 2 ரயில்கள் நேரம் மாற்றம்

கோவை:  கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ஆலப்புழா - சென்னை விரைவு ரயில், போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் ஆலப்புழா- சென்னை விரைவு ரயில் (எண்: 22640) நவம்பா் 11-ந் தேதி முதல் ஆலப்புழாவில் இருந்து மாலை 4.05 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக மதியம் 3.40 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில் போத்தனூருக்கு இரவு 9.40 மணிக்கும், கோவைக்கு இரவு 9.55 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 10.35 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 11.20 மணிக்கும், சேலத்துக்கு இரவு 12.15 மணிக்கும், சென்னைக்கு மறுநாள் காலை 5.30 மணிக்கும் சென்றடையும்.

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12602) மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக 1.35 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில் போத்தனூருக்கு இரவு 9.55 மணிக்கும், திருப்பூருக்கு 10.45 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.40 மணிக்கும் சென்றடையும். சென்னைக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு சென்றடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe