கோவையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ரெயிலில் அடிபட்டு பலி

published 2 years ago

கோவையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ரெயிலில் அடிபட்டு  பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: கோவை ரத்தினபுரி அருகே செக்கான் தோட்டம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தைக் கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை ரெயில்வே காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் ரத்தினபுரியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 32) என்பதும், பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe