வாந்தி எடுத்த டிரைவர் மயங்கி விழுந்து பலி

published 2 years ago

வாந்தி எடுத்த டிரைவர் மயங்கி விழுந்து பலி

கோவை: கோவை பீளமேடு நேரு நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 36). டிரைவர். மது பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த குமரேசன் திடீரென வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு குமரேசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து  பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe