கருமத்தம்பட்டியில் பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடிய கோவை ஆட்சியர்: ரசித்துப் பார்த்த பொதுமக்கள்

published 2 years ago

கருமத்தம்பட்டியில் பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடிய கோவை ஆட்சியர்: ரசித்துப் பார்த்த பொதுமக்கள்

நீலாம்பூர்: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பாரம்பரிய ஒயிலாட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர்  சமீரன், கவுமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம். எல். ஏ கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஒயிலாட்ட அரங்கேற்றத்தைத் தொடங்கி வைத்தனர்.

பல்வேறு ஒயிலாட்ட பாடல்களுக்குச் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனம் ஆடினர். நடனத்தை ரசித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடினார். அவருடன் ஒயிலாட்டக் கலைஞர்களும் நடனமாடினர். இது அங்கிருந்த பொதுமக்களைக் கவரும் விதமாக இருந்தது.

இது குறித்து ஒயிலாட்ட பயிற்சியாளரும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் கூறும்பொழுது:
"பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமம்தோறும் இலவசமாக ஒயிலாட்டம், காவடியாட்டம் கற்றுக் கொடுத்து வருகிறோம். கிராமிய கலைகளைப் பயிலும் இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும்." என்றார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள் கூறும்பொழுது:
"வீட்டிலேயே முடங்கி இருந்த தங்களுக்கு இது போன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தையும், மன வலிமையையும் தருகிறது." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe