கோவையில் காரில் 120 கிலோ குட்கா-வைக் கடத்தியவர் கைது: கஞ்சா விற்ற 2 பேரும் சிக்கினர்

published 2 years ago

கோவையில் காரில் 120 கிலோ குட்கா-வைக் கடத்தியவர் கைது: கஞ்சா விற்ற 2 பேரும் சிக்கினர்

கோவை: குட்கா பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை துடியலூர் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்  துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் துணை-ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் மற்றும்  காவல்துறையினர்  இடிக்கரை ரோடு டீச்சர் காலனி சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குட்காவை விற்பனைக்காக  காரில்  கடத்தி வந்த  சோமனூர் பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர்  ஜெகன் அந்தோணி ராஜேஷ் (வயது 39) என்பவரைக் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு  வைத்திருந்த 120 கிலோ குட்கா  மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஜெகன் அந்தோணி ராஜேசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் பள்ளி அருகே கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்ற ரகு குமார் (30) என்பவரை ஆழியார் காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற சூலூரைச் சேர்ந்த தனியார் நிறுவன சூப்பிரவைசர் பாலசுப்பிரமணி (23) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe