ராவத்தூர் அருகே நொய்யல் ஆற்றில் இறந்து கிடந்த மெக்கானிக்

published 2 years ago

ராவத்தூர் அருகே நொய்யல் ஆற்றில் இறந்து கிடந்த மெக்கானிக்

சூலூர்: சூலூர் அருகே திருச்சி சாலையில் ராவத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்ப்பவர் மணிகண்டன் (வயது 30).

இவர் சம்பவத்தன்று காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றார். அதன் பின்னர் திடீரென காணாமல் போனார். இந்நிலையில் அன்று  மாலை ராவத்தூர் நொய்யல் பாலம் வழியாகச் சென்ற பொதுமக்கள் ஆற்றில் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.   காவல்துறையினர் மற்றும் சூலூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில்  இறங்கி இறந்தவரின் உடலை மீட்டனர்.   அப்போது இறந்து கிடந்தது மணிகண்டன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சிங்காநல்லூர் மற்றும் சூலூர் காவல்துறையினர் இடையே உடல் மீட்கப்பட்ட பகுதி யாருடைய எல்லை எனப் பிரச்சினை எழுந்தது.

அப்போது அந்தப் பகுதி சிங்காநல்லூர்  காவல்துறையின் எல்லைக்கு உட்பட்டது எனத் தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு  பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe