கோவையில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதால் இரும்பு வியாபாரியைத் தாக்கிய தந்தை, மகன்

published 2 years ago

கோவையில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதால் இரும்பு வியாபாரியைத் தாக்கிய தந்தை, மகன்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை கரும்புக்கடை சாரமேட்டைச் சேர்ந்தவர் முகமத் அப்துல்லா (38), இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு காரை அடைமானம் வைத்து ரூ. 5.5 லட்சம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. 
இந்நிலையில் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு முகமத் அப்துல்லா, ரியாசிடம் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் ரியாஸ் ரூ.50 ஆயிரத்தை முகமத் அப்துல்லாவிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தைத் தருமாறு ரியாசிடம் முகமத் அப்துல்லா கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த ரியாஸ் மற்றும் அவரது தந்தை ரபீக் ஆகிய இருவரும் சேர்ந்து முகமத் அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்து மிரட்டி விட்டுச் சென்றனர். 
இதில் முகமத் அப்துல்லாவிற்கு மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் ரியாஸ் மற்றும் அவரது தந்தை ரபீக் ஆகிய இருவர் மீதும் தாக்குதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe